பிரிவின்போது தலைவனை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த தலைவி, அவன் வந்ததும் தன் ஆற்றாமையும், ஆவலும் தீர அவனைக் கூடி மகிழ்ந்தாள். அவளது மகிழ்ச்சியையும், அவனிடம் அவள் எவ்வளவு அன்பு கொண்டிருந்தாள் என்பதையும் விளக்குகிறது இப்பாடல்.
கடற்கரை ஊரைச் சேர்ந்தவன் தலைவன். கடலோரத்தில் தாழை மரங்கள் மிகுதியாக உள்ளன. மகரந்தத் துகளோடு கூடிய அத்தாழையின் பூமடல்கள் அணிலின் பல்போன்று காணப்படுகின்றன; நீலநிற மணிபோன்று கடல்நீர் நீலமாகக் காணப்படுகிறது. இத்தகைய "கடற்கரையின் ஊருக்குத் தலைவனே! எனது இப்பிறவி நீங்கி, மறுபிறப்பு ஒன்று உண்டானாலும் நீயே என் கணவனாக இருக்க வேண்டும்; அதேபோல உன் மனத்துக்குப் பிடித்தமானவளாக நானே வரவேண்டும்" இவ்வாறு தலைவி தன் அன்பு மிகுதியை வெளிப்படுத்தினாள். இதனை இயற்றியவர் அம்மூவனார்.
"அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயாகியர் எம் கணவனை;
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே!" [குறு - 49]
[கொங்கு - மகரந்தம்;
முண்டகம் - தாழை;
கேழ் - நிறம்;
மாநீர் - கடல்;
ஆகியர் - ஆகுக;
நேர்பவள் - பிடித்தமானவள்]
Monday, September 28, 2009
19. பாடலி பெறீ'இயர்
மகத நாட்டையாண்ட மௌரிய வம்சத்தினருக்குத் தலைநகராக விளங்கியது பாடலிபுத்திரநகர். இக்காலத்தில் அது பாட்னா என்றழைக்கப்படுகிறது. அந்நகரைப் பரிசாகப் பெறுக என்பதுதான் இத்தலைப்பு. தலைவனைப் பிரிந்திருந்த ஒரு தலைவியிடம் பாணன் ஒருவன் வந்து அவளது காதலனாகிய தலைவன் வந்துவிட்டான் என்று அறிவித்தான். அதுகேட்டுப் பெருமகிழ்ச்சியடைந்த தலைவி அவனுக்குப் பரிசு வழங்க விரும்புகிறாள்.
"பாணனே! என் காதலரின் வருகையை நீயே நேரில் கண்டாய? அல்லது யாரேனும் கண்டு வந்து கூறியதைக் கேட்டாயா? யாரிடத்திற் கேட்டு அறிந்தாய்? ஒன்றைத் தெளிவாக அறிய விரும்புகிறேன். என்று கேள்விமேல் கேள்வியாக அடுக்கினாள். இந்த நல்ல செய்தியைக் கூறிய அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பினாள். மகத நாட்டுத் தலைநகராகிய பாடலி, சோணை நதிக்கரையிலுள்ளது; அவ்வாற்றில் வெண்மையான தந்தங்களை உடைய யானைகள் நீராடப் படியும்.அக்காலத்தில் செல்வச் செழிப்புடன் விளங்கியது அந்நகரம். அதனையே அவனுக்குப் பரிசாகத் தர விரும்பிய தலைவி, ஆவல் மேலிட, "சொல், யார் சொல்லக் கேட்டாய் என் காதலர் வரவை? நீ பொன் நிறைந்த பாடலி நகரையே பரிசாகப் பெறுக" எனக் கூறினாள். காதலரின் வரவில் அத்தலைவி எவ்வளவு எதிர்பார்ப்பும் ஆவலும் கொண்டிருந்தாள் என்பதை இப்பாடல் விளக்குகிறது. இதனை இயற்றியவர் படுமரத்து மோசிகீரனார்.
"நீகண் டனையோ? கண்டார்க் கேட்டனையோ?
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ!
வெண் கோட்டு யானை சோணை படியும்
பொன் மலி பாடலி பெறீ'இயர்!
யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே?" [குறு - 75]
[நசையினம் - விரும்பினோம்;
பெறீ'இயர் - பெறுக]
"பாணனே! என் காதலரின் வருகையை நீயே நேரில் கண்டாய? அல்லது யாரேனும் கண்டு வந்து கூறியதைக் கேட்டாயா? யாரிடத்திற் கேட்டு அறிந்தாய்? ஒன்றைத் தெளிவாக அறிய விரும்புகிறேன். என்று கேள்விமேல் கேள்வியாக அடுக்கினாள். இந்த நல்ல செய்தியைக் கூறிய அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பினாள். மகத நாட்டுத் தலைநகராகிய பாடலி, சோணை நதிக்கரையிலுள்ளது; அவ்வாற்றில் வெண்மையான தந்தங்களை உடைய யானைகள் நீராடப் படியும்.அக்காலத்தில் செல்வச் செழிப்புடன் விளங்கியது அந்நகரம். அதனையே அவனுக்குப் பரிசாகத் தர விரும்பிய தலைவி, ஆவல் மேலிட, "சொல், யார் சொல்லக் கேட்டாய் என் காதலர் வரவை? நீ பொன் நிறைந்த பாடலி நகரையே பரிசாகப் பெறுக" எனக் கூறினாள். காதலரின் வரவில் அத்தலைவி எவ்வளவு எதிர்பார்ப்பும் ஆவலும் கொண்டிருந்தாள் என்பதை இப்பாடல் விளக்குகிறது. இதனை இயற்றியவர் படுமரத்து மோசிகீரனார்.
"நீகண் டனையோ? கண்டார்க் கேட்டனையோ?
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ!
வெண் கோட்டு யானை சோணை படியும்
பொன் மலி பாடலி பெறீ'இயர்!
யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே?" [குறு - 75]
[நசையினம் - விரும்பினோம்;
பெறீ'இயர் - பெறுக]
Labels:
படுமரத்து மோசிகீரனார்,
பாடலிபுத்திரம்,
பாட்னா
18. இனி அறிந்தேன்
'இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்' என்பது இத்தொடரின் பொருள். தலைவி உடன்போக்கை விரும்புகிறாள் என்பதை, அவள் தன்னுடன் வீட்டிலிருக்கும்போது ஒரு செவிலித்தாய் உணரவில்லை. அவள் தலைவனுடன் உடன்போக்கை மேற்கொண்டபின், 'முன்னமே அவள் கூறிய சொற்களைக் கொண்டு இதனை அறியாமல் போனேனே' என்று வருந்துகிறாள்.
கடையெழு வள்ளல்களில் ஒருவன் ஆய் அண்டிரன் என்பவன். அவன் பொதிய மலைக்குத் தலைவன். அம்மலைப் பாங்கரில் வேங்கை, காந்தள், ஆம்பல் போன்ற மலர்கள் மிகுதியாக உள்ளன. நீர்வளம் மிக்க அப்பகுதியில் இப்பூக்கள் தோன்றி வளர்வதற்குக் கேட்கவா வேண்டும்! மலை முகடுகளில் எப்பொழுதும் மேகங்கள் தவழ்ந்து கொண்டிருக்கும். இத்தகைய மலைக்குத் தலைவனாகிய ஆய் சிறந்த வள்ளலாக இருந்ததோடு, வீரக்கழலும், தோள்வளையும் அணிந்த பெருவீரனாகவும் விளங்கினான்.
தலைவியும் இப்பகுதியைச் சேர்ந்தவள். அவள் அங்குள்ள நீர்நிலைகளில் நீராடுவதாலும், மலர்களை விரும்பி அணிவதாலும் அவளது உடல் வேங்கை, காந்தள் போன்ற மலர்களின் மணங்கமழும்; எப்பொழுதும் நீருக்குள்ளேயே இருக்கும் ஆம்பல் மலரைவிட அவளது உடல் குளிர்ச்சியுடையதாயிருந்தது.
செவிலித்தாய் கூறுகிறாள்: "தலைவியின் மேலுள்ள அன்பினால், அவளை நான் அடிக்கடி திரும்பத்திரும்பத் தழுவிக்கொள்வேன்; அப்பொழுதெல்லாம் அவள் 'எனக்கு வியர்க்கிறது' என்பாள். ஆம்பல் மலரை விடக் குளிர்ந்த உடலையுடைய இவள் 'வியர்த்தேன்' என்கிறாளே! என்ன அதிசயம்! என்று எண்ணினேன்; அப்பொழுது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை; ஆகையால் அத்துடன் விட்டு விட்டேன். ஆனால் இப்பொழுதுதான் எனக்குப் புரிகிறது! தலைவன் மீதுள்ள அன்பினாலும், அவனுடன் செல்ல விரும்பியதாலும்தான் அவள் அப்படிக் கூறியிருக்கிறாள்; நான் தழுவுவதையும் வெறுத்திருக்கிறாள் என்பது!"
இந்தச் சுவையான பாடலை எழுதியவர் மோசிகீரனார்.
"பெயர்த்தனென் முயங்க,'யான் வியர்த்தனென்' என்றனள்;
இனியறிந்தேன் அது துனியா குதலே!
கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி,
ஆம்பல் மலரினும் தான்தண்ணியளே!" [குறு - 84]
[பெயர்த்தனென் - திரும்பவும்;
முயங்க - தழுவிக் கொள்ள;
துனியாகுதல் - வெறுப்படைதல்;
மழை - மேகம்;
நாறி - மணமுடையதாய்;
தண்ணியள் - குளிர்ந்திருப்பவள்]
கடையெழு வள்ளல்களில் ஒருவன் ஆய் அண்டிரன் என்பவன். அவன் பொதிய மலைக்குத் தலைவன். அம்மலைப் பாங்கரில் வேங்கை, காந்தள், ஆம்பல் போன்ற மலர்கள் மிகுதியாக உள்ளன. நீர்வளம் மிக்க அப்பகுதியில் இப்பூக்கள் தோன்றி வளர்வதற்குக் கேட்கவா வேண்டும்! மலை முகடுகளில் எப்பொழுதும் மேகங்கள் தவழ்ந்து கொண்டிருக்கும். இத்தகைய மலைக்குத் தலைவனாகிய ஆய் சிறந்த வள்ளலாக இருந்ததோடு, வீரக்கழலும், தோள்வளையும் அணிந்த பெருவீரனாகவும் விளங்கினான்.
தலைவியும் இப்பகுதியைச் சேர்ந்தவள். அவள் அங்குள்ள நீர்நிலைகளில் நீராடுவதாலும், மலர்களை விரும்பி அணிவதாலும் அவளது உடல் வேங்கை, காந்தள் போன்ற மலர்களின் மணங்கமழும்; எப்பொழுதும் நீருக்குள்ளேயே இருக்கும் ஆம்பல் மலரைவிட அவளது உடல் குளிர்ச்சியுடையதாயிருந்தது.
செவிலித்தாய் கூறுகிறாள்: "தலைவியின் மேலுள்ள அன்பினால், அவளை நான் அடிக்கடி திரும்பத்திரும்பத் தழுவிக்கொள்வேன்; அப்பொழுதெல்லாம் அவள் 'எனக்கு வியர்க்கிறது' என்பாள். ஆம்பல் மலரை விடக் குளிர்ந்த உடலையுடைய இவள் 'வியர்த்தேன்' என்கிறாளே! என்ன அதிசயம்! என்று எண்ணினேன்; அப்பொழுது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை; ஆகையால் அத்துடன் விட்டு விட்டேன். ஆனால் இப்பொழுதுதான் எனக்குப் புரிகிறது! தலைவன் மீதுள்ள அன்பினாலும், அவனுடன் செல்ல விரும்பியதாலும்தான் அவள் அப்படிக் கூறியிருக்கிறாள்; நான் தழுவுவதையும் வெறுத்திருக்கிறாள் என்பது!"
இந்தச் சுவையான பாடலை எழுதியவர் மோசிகீரனார்.
"பெயர்த்தனென் முயங்க,'யான் வியர்த்தனென்' என்றனள்;
இனியறிந்தேன் அது துனியா குதலே!
கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி,
ஆம்பல் மலரினும் தான்தண்ணியளே!" [குறு - 84]
[பெயர்த்தனென் - திரும்பவும்;
முயங்க - தழுவிக் கொள்ள;
துனியாகுதல் - வெறுப்படைதல்;
மழை - மேகம்;
நாறி - மணமுடையதாய்;
தண்ணியள் - குளிர்ந்திருப்பவள்]
Friday, September 11, 2009
17. தானே இருக்க
ஒரு தலைவி தான் தலைவனுடன் செல்லத்துணிந்த காரணங்களையும், அவ்வாறு உடன்செல்வதால் தனக்குண்டாகும் மிக்க மகிழ்ச்சியையும் கூறுவதாக அமைந்தது இப்பாடல்.
"இவ்வூரில் அலர், அதாவது எங்களைப் பற்றிய பழிமொழிகளை மக்கள் தூற்றுகின்றனர்; அதனால் தெருவெல்லாம் ஒரே ஆரவாரம்; இவற்றைக் கேட்ட தாய் ஓயாமல் என்னைத் துன்புறுத்துகிறாள். அதனால் நான் தலைவனுடன் செல்லத் துணிந்துவிட்டேன்! அறநெறியையும் உலக ஒழுக்கத்தையும் அறியாதவளாக இருக்கும் என் தாய், தானே இம்மனையில் இருக்கட்டும்!
"வானளாவ உயர்ந்து வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இப்பெரிய மலையின் ஒரு பக்கவாட்டில் உள்ள நெடுந்தூர நாட்டைச் சேர்ந்தவன் என் தலைவன். அம்மலைப் பகுதியில் பெரிய யானைகள் பலமுறை சென்று வருவதால், அவ்வழி பள்ளமாக உள்ளது; அதன் இருபக்கமும் உயர்ந்து கரும்பு நடுவதற்காக அமைத்த பாத்தி போலத் தோன்றுகின்றது. அப்பள்ளத்தில் எப்பொழுதும் நீர் தேங்கி உள்ளது. யானைகள் நடமாடும் இப்பாதையில் நான் தலைவனுடன் செல்லும்போது நெல்லிக்காய்களைத் தின்பேன்; பின் இப்பள்ளத்து நீரை முள்போன்ற என் பற்கள் தோன்றும்படிப் பருகுவேன்! இவ்வாறு யானைகளால் ஏற்படக் கூடிய அச்சத்தினை மறந்து, நெல்லிக்காயும் நீரும் உண்ணும் இனிமையை எண்ணி மகிழ்வோடு செல்வேன்" என்று தலைவி கூறுகிறாள்.
தன்னை அலைக்கழித்த தாய் தன் வீட்டிலேயே இருப்பாளாக என்றும், தான் தலைவனுடன் வழிநடைத்துன்பங்களை மறந்து மகிழ்வோடு செல்ல எண்ணுகிறேன் என்றும் தலைவி கூறிய இப்பாடலை இயற்றியவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ.
"ஊஉர் அலர்'எழச் சேரி கல்லென,
ஆறாது அலைக்கும் அறனில் அன்னை
தானே இருக்க, தன்மனை! யானே,
நெல்லி தின்ற முள்'எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால், அவரொடு; சேய்நாட்டு
விண்தொட நிவந்த விலங்கு மலைக்கவாஅன்
கரும்புநடு பாத்தி அன்ன
பெருங்களிற்று அடிவழி நிலை'இய நீரே!" [குறு - 262]
[கல்லென - ஆரவாரமுண்டாக;
ஆனாது - இடைவிடாது;
முள்'எயிறு - முள் போன்ற பல்;
ஆய்ந்திசின்'ஆல் - எண்ணுகிறேன்;
இசின் ஆல் - அசைநிலைகள்;
சேய்நாடு - தொலைதூரத்து நாடு;
நிவந்த - உயர்ந்த;
விலங்குமலைக்கவான் - குறுக்கே நின்று தடுக்கும் மலையினது பக்கம்]
"இவ்வூரில் அலர், அதாவது எங்களைப் பற்றிய பழிமொழிகளை மக்கள் தூற்றுகின்றனர்; அதனால் தெருவெல்லாம் ஒரே ஆரவாரம்; இவற்றைக் கேட்ட தாய் ஓயாமல் என்னைத் துன்புறுத்துகிறாள். அதனால் நான் தலைவனுடன் செல்லத் துணிந்துவிட்டேன்! அறநெறியையும் உலக ஒழுக்கத்தையும் அறியாதவளாக இருக்கும் என் தாய், தானே இம்மனையில் இருக்கட்டும்!
"வானளாவ உயர்ந்து வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இப்பெரிய மலையின் ஒரு பக்கவாட்டில் உள்ள நெடுந்தூர நாட்டைச் சேர்ந்தவன் என் தலைவன். அம்மலைப் பகுதியில் பெரிய யானைகள் பலமுறை சென்று வருவதால், அவ்வழி பள்ளமாக உள்ளது; அதன் இருபக்கமும் உயர்ந்து கரும்பு நடுவதற்காக அமைத்த பாத்தி போலத் தோன்றுகின்றது. அப்பள்ளத்தில் எப்பொழுதும் நீர் தேங்கி உள்ளது. யானைகள் நடமாடும் இப்பாதையில் நான் தலைவனுடன் செல்லும்போது நெல்லிக்காய்களைத் தின்பேன்; பின் இப்பள்ளத்து நீரை முள்போன்ற என் பற்கள் தோன்றும்படிப் பருகுவேன்! இவ்வாறு யானைகளால் ஏற்படக் கூடிய அச்சத்தினை மறந்து, நெல்லிக்காயும் நீரும் உண்ணும் இனிமையை எண்ணி மகிழ்வோடு செல்வேன்" என்று தலைவி கூறுகிறாள்.
தன்னை அலைக்கழித்த தாய் தன் வீட்டிலேயே இருப்பாளாக என்றும், தான் தலைவனுடன் வழிநடைத்துன்பங்களை மறந்து மகிழ்வோடு செல்ல எண்ணுகிறேன் என்றும் தலைவி கூறிய இப்பாடலை இயற்றியவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ.
"ஊஉர் அலர்'எழச் சேரி கல்லென,
ஆறாது அலைக்கும் அறனில் அன்னை
தானே இருக்க, தன்மனை! யானே,
நெல்லி தின்ற முள்'எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால், அவரொடு; சேய்நாட்டு
விண்தொட நிவந்த விலங்கு மலைக்கவாஅன்
கரும்புநடு பாத்தி அன்ன
பெருங்களிற்று அடிவழி நிலை'இய நீரே!" [குறு - 262]
[கல்லென - ஆரவாரமுண்டாக;
ஆனாது - இடைவிடாது;
முள்'எயிறு - முள் போன்ற பல்;
ஆய்ந்திசின்'ஆல் - எண்ணுகிறேன்;
இசின் ஆல் - அசைநிலைகள்;
சேய்நாடு - தொலைதூரத்து நாடு;
நிவந்த - உயர்ந்த;
விலங்குமலைக்கவான் - குறுக்கே நின்று தடுக்கும் மலையினது பக்கம்]
Thursday, September 10, 2009
16. யார்கொல் அளியர்
ஒரு தலைவி உடன்போக்கு மேற்கொண்டு தலைவனுடன் அவனூரில் சென்று வாழத்துணிந்தாள். வழியில் ஏற்படும் தொல்லைகளைப்பற்றிக் கவலைப்படாமல் புறப்பட்டுவிட்டாள். அவ்விருவரும் காட்டு வழியில் செல்வதைச் சில வழிப்போக்கர்கள் கண்டனர். அவ்விருவர்மேலும் இரக்கம் கொண்டு அவர்கள் தங்களுக்குள் பின்வருமாறு பேசிக் கொண்டனர்:
"வீரனைப்போல் தோன்றும் இத்தலைவன் வில்லேந்தியிருக்கிறான்; கால்களில் வீரக்கழலணிந்திருக்க்கிறான். அவனைப் போலவே தலைவியும் வளையல்களை அணிந்திருக்கிறாள்; அவளது மெல்லிய பாதங்களிலும் சிலம்புகள் உள்ளன. நல்லவர்களாகக் காணப்படும் இவர்கள் யாரோ தெரியவில்லையே! மூங்கில் மரங்கள் நிறைந்த இந்தக் காட்டுவழியை மேற்கொண்ட இவர்கள் பாவம் இரங்கத்தக்கவர்கள்! இக்காட்டிலுள்ள வாகை மரங்களின் காய்ந்த வெண்மையான நெற்றுகள் காற்று வீசுவதால் அசைந்து ஒலிக்கின்றன. இவ்வொலி, ஆரியக்கூத்தாடுகின்றவர்கள் கயிற்றின் மேலிருந்து ஆடும்பொழுது முழங்கும் பறையொலிபோலப் பயங்கரமாக ஒலிக்கின்றது. அச்சந்தரும் இக்காட்டுவ்ழியை மேற்கொண்ட இக்காதலர்கள் உண்மையிலேயே இரங்கத்தக்கவர்கள்தாம்!"
இக்கருத்தமைந்த பாடலின் ஆசிரியர் பெரும்பதுமனார்.
"வில்லோன் காலன கழலே, தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார்கொல்? அளியர் தாமே! ஆரியர்
கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னியோரே!" [குறு - 7]
[காலன - காலில் இருப்பவை; அளியர் - இரங்கத்தக்கவர்; ஆரியர் - கூத்துவகைகளில் ஒன்றான ஆரியக்கூத்தை ஆடுபவர்கள்; கால்பொர - காற்று மோதுவதால்; அழுவம் - காடு]
"வீரனைப்போல் தோன்றும் இத்தலைவன் வில்லேந்தியிருக்கிறான்; கால்களில் வீரக்கழலணிந்திருக்க்கிறான். அவனைப் போலவே தலைவியும் வளையல்களை அணிந்திருக்கிறாள்; அவளது மெல்லிய பாதங்களிலும் சிலம்புகள் உள்ளன. நல்லவர்களாகக் காணப்படும் இவர்கள் யாரோ தெரியவில்லையே! மூங்கில் மரங்கள் நிறைந்த இந்தக் காட்டுவழியை மேற்கொண்ட இவர்கள் பாவம் இரங்கத்தக்கவர்கள்! இக்காட்டிலுள்ள வாகை மரங்களின் காய்ந்த வெண்மையான நெற்றுகள் காற்று வீசுவதால் அசைந்து ஒலிக்கின்றன. இவ்வொலி, ஆரியக்கூத்தாடுகின்றவர்கள் கயிற்றின் மேலிருந்து ஆடும்பொழுது முழங்கும் பறையொலிபோலப் பயங்கரமாக ஒலிக்கின்றது. அச்சந்தரும் இக்காட்டுவ்ழியை மேற்கொண்ட இக்காதலர்கள் உண்மையிலேயே இரங்கத்தக்கவர்கள்தாம்!"
இக்கருத்தமைந்த பாடலின் ஆசிரியர் பெரும்பதுமனார்.
"வில்லோன் காலன கழலே, தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார்கொல்? அளியர் தாமே! ஆரியர்
கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னியோரே!" [குறு - 7]
[காலன - காலில் இருப்பவை; அளியர் - இரங்கத்தக்கவர்; ஆரியர் - கூத்துவகைகளில் ஒன்றான ஆரியக்கூத்தை ஆடுபவர்கள்; கால்பொர - காற்று மோதுவதால்; அழுவம் - காடு]
15. உடன் போக்கு
தலைவி தலைவனுடன் அவனிருப்பிடத்திற்குச் செல்லுதல் என்பது இதன் பொருள். இக்காலத்திலும் சில பெண்கள் தாம் காதலிப்பதை வீட்டிலுள்ளோர் ஏற்காவிட்டால், காதலனுடன் 'ஓடிப் போதல்' உண்டல்லவா? அக்காலத்தில் தலைவி தான் விரும்பும் தலைவனுக்குத் தன்னைப் பெற்றோர் மணமுடிக்க விரும்பாவிட்டால், அல்லது வேறு ஒருவனுக்கு மணம் பேச முனைந்தால், அல்லது ஊரில் அலர் எழுந்தால் (ஊர் மக்கள் பழித்துப் பேச முற்பட்டால்) அல்லது தலைவனே விரும்பினால், அவனுடன் வேற்றூர் சென்று வாழத் துணிவாள். இதனையே உடன்போக்கு என்பர். சில சமயம் தலைவன் உடன்போக்கை விரும்பாமல் காட்டுவழியில் ஏற்படும் துன்பங்களையும், கள்வர்கள் வழிப்பறி செய்யும் தொல்லை பற்றியும் எடுத்துக் கூறித் தடுப்பதுண்டு; தடுத்தாலும் தலைவி உடன் செல்வதையே விரும்புவாள்; அவனைப் பிரிந்து வீட்டிலிருந்து வருந்துவதைக் காட்டிலும், உடன் செல்வதே மேல் என்று எண்ணுவாள்.
அவ்வாறு உடன் செல்லத் துணிந்த ஒரு தலைவியின் உள்ளப்பாங்கை இப்பொழுது காணலாம். "என் மனமே! நீ உடனே புறப்படு; கட்டி என்பான் ஒரு சிற்றூர்த் தலைவன்; அவன் வேலெறிதலில் வல்லவன்; அவனது ஊருக்கு அப்பாலுள்ளது நம் தலைவனது ஊர்; அது குல்லை என்ற ஒருவகைப்பூவைத் தலைமாலையாக அணிந்த வடுகா நாட்டின் எல்லையிலுள்ளது. அங்கெல்லாம் வாழும் மக்கள் வேற்றுமொழி பேசுபவர்கள். இவற்றுக்கெல்லாம் கவலைப்படாமல் உடனே புறப்படு.
நான் அவனுடைய நாட்டுக்குச் சென்று அவனை வழிபட்டு வாழ விரும்புகிறேன். அதனால் உடனே புறப்படு; அவனைப் பிரிந்து வருந்துவதால் என் உடல் மெலிந்து, சங்கினை அறுத்துச் செய்த என் வளையல்கள் கழன்று விழுகின்றன. என் கண்கள் நாள் முழுவதும் உறங்காமல் அழுதுகொண்டே இருக்கின்றன. இவ்வாறு இங்கு வருந்தித் தனித்து வாழ்வதிலிருந்து அவனுடன் செல்வதால் தப்பிப் பிழைக்கலாம்! ஆகையால் நெஞ்சே! உடனே புறப்படு" என்று தன் நெஞ்சிற்குக் கூறுவதுபோல் தோழி கேட்கும்படி தான் உடன்போக்கிற்குத் துணிந்ததைத் தலைவி கூறினாள்.
இதனை விளக்கும் பாடல் மாமூலனார் இயற்றியது:
"கோடுஈர் இலங்குவளை நெகிழ, நாளும்
பாடுஇல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவள் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழுஇனி! வாழி!என் நெஞ்சே; முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நன்னாட்டு உப்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
வழிபடல் சூழ்ந்திசின்; அவருடை நாட்டே."
[கோடு - சங்கு; ஈர் - அறுத்துச் செய்த; பாடு இல - மூடுவதில்லாமல் (உறங்காமல்); கலுழும் - கண்ணீர் விடுகின்ற; முனாஅது - முன்னால் உள்ளது; கட்டி - ஒரு சிற்றூர்த் தலைவன்; உம்பர் - அப்பால்; சூழ்ந்திசின் - எண்ணினேன்]
அவ்வாறு உடன் செல்லத் துணிந்த ஒரு தலைவியின் உள்ளப்பாங்கை இப்பொழுது காணலாம். "என் மனமே! நீ உடனே புறப்படு; கட்டி என்பான் ஒரு சிற்றூர்த் தலைவன்; அவன் வேலெறிதலில் வல்லவன்; அவனது ஊருக்கு அப்பாலுள்ளது நம் தலைவனது ஊர்; அது குல்லை என்ற ஒருவகைப்பூவைத் தலைமாலையாக அணிந்த வடுகா நாட்டின் எல்லையிலுள்ளது. அங்கெல்லாம் வாழும் மக்கள் வேற்றுமொழி பேசுபவர்கள். இவற்றுக்கெல்லாம் கவலைப்படாமல் உடனே புறப்படு.
நான் அவனுடைய நாட்டுக்குச் சென்று அவனை வழிபட்டு வாழ விரும்புகிறேன். அதனால் உடனே புறப்படு; அவனைப் பிரிந்து வருந்துவதால் என் உடல் மெலிந்து, சங்கினை அறுத்துச் செய்த என் வளையல்கள் கழன்று விழுகின்றன. என் கண்கள் நாள் முழுவதும் உறங்காமல் அழுதுகொண்டே இருக்கின்றன. இவ்வாறு இங்கு வருந்தித் தனித்து வாழ்வதிலிருந்து அவனுடன் செல்வதால் தப்பிப் பிழைக்கலாம்! ஆகையால் நெஞ்சே! உடனே புறப்படு" என்று தன் நெஞ்சிற்குக் கூறுவதுபோல் தோழி கேட்கும்படி தான் உடன்போக்கிற்குத் துணிந்ததைத் தலைவி கூறினாள்.
இதனை விளக்கும் பாடல் மாமூலனார் இயற்றியது:
"கோடுஈர் இலங்குவளை நெகிழ, நாளும்
பாடுஇல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவள் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழுஇனி! வாழி!என் நெஞ்சே; முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நன்னாட்டு உப்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
வழிபடல் சூழ்ந்திசின்; அவருடை நாட்டே."
[கோடு - சங்கு; ஈர் - அறுத்துச் செய்த; பாடு இல - மூடுவதில்லாமல் (உறங்காமல்); கலுழும் - கண்ணீர் விடுகின்ற; முனாஅது - முன்னால் உள்ளது; கட்டி - ஒரு சிற்றூர்த் தலைவன்; உம்பர் - அப்பால்; சூழ்ந்திசின் - எண்ணினேன்]
Sunday, August 16, 2009
14. "இன்னும் பாடுக"
நாம் எண்ணியது நிறைவேறுமா எனவும், துன்பங்கள் உண்டாகும்போது அவை எப்போது நீங்கும் எனவும் அறிவதற்காகக் குறி கேட்டல், சோழியிட்டுப் பார்த்தல் முதலியவற்றை இக்காலத்திலும் சிலர் மேற்கொள்கின்றனர். அதுபோல அக்காலத்திலும் முறத்தில் நெல், அரிசி முதலியன இட்டும், சோழிகளின் எண்ணிக்கை கொண்டும் குறி கூறுதல் உண்டு. இதனைக் 'கட்டுக் காணுதல்' என்பர். இவ்வாறு பார்த்துக் குறி சொல்வோரைக் 'கட்டுவிச்சி' என்பர். குறிசொல்லும்போது தெய்வங்களை அழைத்து அவள் பாடுதலால் 'அகவன் மகள்' என்றும் அவர்களைக் கூறுவர்.
தலைவனைப் பிரிந்த வருத்தத்தால் தலைவி உண்ணாமலும், உறங்காமலும், தோழிகளோடு விளையாடாமலும், யாவருடனும் பேசிச் சிரித்து மகிழாமலும் இருப்பாள். இவளது நிலை கண்ட தாய், இது தெய்வக்குற்றத்தால் ஏற்பட்டதோ, ஏதேனும் நோயினால் உண்டானதா எனக் கவலை கொள்வாள். அப்பொழுது கட்டுவிச்சியை அழைத்து உண்மையைக் கண்டுகூறும்படி கேட்பாள். இதுபோன்ற சமயங்களில் வெறியாட்டயர்தலும் உண்டு. அதுபற்றி முன்னமே பார்த்துள்ளோம்.
இப்பொழுது ஒரு தலைவியின் நோய்க்கான காரணத்தை அறிய அவள்தாய் கட்டுவிச்சியை அழைத்துக் குறி கேட்டாள். அவளும் வந்து தெய்வங்களை அழைத்துப் பாடத் தொடங்கினாள். அவள் பாடிய பாட்டினிடையே தலைவனுடைய மலையின் பெயரும் வந்தது. அதனைக் கேட்ட தோழி, "தெய்வங்களை அழைத்துப் பாடும் அம்மையே! சங்குமணிகளைக் கோத்தது போலச் சுருண்ட கூந்தலை உடையவளே! இப்பொழுது நீ பாடிய அந்தப் பாடலை - தலைவனது நெடிய குன்றத்தைப் பற்றிய அந்தப் பாடலை - இன்னும் பாடுக; இதைக்கேட்டே எங்கள் தலைவியின் நோய் நீங்குமாதலால், அந்தப் பாட்டை இன்னும் பாடுக!" என்று கூறினாள். இவ்வாறு கூறுவதால், தலைவியின் நோய்க்குக் கடவுட்குற்றம் காரணமன்று; தலைவனைப் பிரிந்தமையே காரணம் என்பதைக் குறிப்பாகத் தோழி செவிலிக்கு உணர்த்தினாள். இவ்வாறு உண்மை உணர்த்துவது 'அறத்தொடுநிலை' எனப்படும். இங்கு தோழி செவிலிக்கு உணர்த்தியதுபோலத் தலைவியே தோழிக்கு உணர்த்தலும், செவிலி ந்ற்றாய்க்கு உணர்த்தலும், நற்றாய் தந்தை தன்னையர்க்கு உணர்த்தலும் 'அறத்தொடுநிலை' எனப்படும்.
தோழியின் சொற்கேட்ட செவிலி, தலைவனைப் பற்றி அறிந்து, அவனுடன் தலைவியைச் சேர்த்துவைக்கும் மண ஏற்பாடுகளைத் தொடங்குவாள் என்பது கூற வேண்டியதில்லை.
"அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக் கோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே;
இன்னும் பாடுக பாட்டே! அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!" [குறு - 23]
இப்பாடலியற்றிய புலவர் ஔவையார்.
[அகவல் - அழைத்தல்;
மனவுக்கோப்பு - சங்குமணிகளைக் கோத்த மாலை; (அது சுருண்ட வெண்மையான கூந்தலுக்கு உவமை)]
தலைவனைப் பிரிந்த வருத்தத்தால் தலைவி உண்ணாமலும், உறங்காமலும், தோழிகளோடு விளையாடாமலும், யாவருடனும் பேசிச் சிரித்து மகிழாமலும் இருப்பாள். இவளது நிலை கண்ட தாய், இது தெய்வக்குற்றத்தால் ஏற்பட்டதோ, ஏதேனும் நோயினால் உண்டானதா எனக் கவலை கொள்வாள். அப்பொழுது கட்டுவிச்சியை அழைத்து உண்மையைக் கண்டுகூறும்படி கேட்பாள். இதுபோன்ற சமயங்களில் வெறியாட்டயர்தலும் உண்டு. அதுபற்றி முன்னமே பார்த்துள்ளோம்.
இப்பொழுது ஒரு தலைவியின் நோய்க்கான காரணத்தை அறிய அவள்தாய் கட்டுவிச்சியை அழைத்துக் குறி கேட்டாள். அவளும் வந்து தெய்வங்களை அழைத்துப் பாடத் தொடங்கினாள். அவள் பாடிய பாட்டினிடையே தலைவனுடைய மலையின் பெயரும் வந்தது. அதனைக் கேட்ட தோழி, "தெய்வங்களை அழைத்துப் பாடும் அம்மையே! சங்குமணிகளைக் கோத்தது போலச் சுருண்ட கூந்தலை உடையவளே! இப்பொழுது நீ பாடிய அந்தப் பாடலை - தலைவனது நெடிய குன்றத்தைப் பற்றிய அந்தப் பாடலை - இன்னும் பாடுக; இதைக்கேட்டே எங்கள் தலைவியின் நோய் நீங்குமாதலால், அந்தப் பாட்டை இன்னும் பாடுக!" என்று கூறினாள். இவ்வாறு கூறுவதால், தலைவியின் நோய்க்குக் கடவுட்குற்றம் காரணமன்று; தலைவனைப் பிரிந்தமையே காரணம் என்பதைக் குறிப்பாகத் தோழி செவிலிக்கு உணர்த்தினாள். இவ்வாறு உண்மை உணர்த்துவது 'அறத்தொடுநிலை' எனப்படும். இங்கு தோழி செவிலிக்கு உணர்த்தியதுபோலத் தலைவியே தோழிக்கு உணர்த்தலும், செவிலி ந்ற்றாய்க்கு உணர்த்தலும், நற்றாய் தந்தை தன்னையர்க்கு உணர்த்தலும் 'அறத்தொடுநிலை' எனப்படும்.
தோழியின் சொற்கேட்ட செவிலி, தலைவனைப் பற்றி அறிந்து, அவனுடன் தலைவியைச் சேர்த்துவைக்கும் மண ஏற்பாடுகளைத் தொடங்குவாள் என்பது கூற வேண்டியதில்லை.
"அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக் கோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே;
இன்னும் பாடுக பாட்டே! அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!" [குறு - 23]
இப்பாடலியற்றிய புலவர் ஔவையார்.
[அகவல் - அழைத்தல்;
மனவுக்கோப்பு - சங்குமணிகளைக் கோத்த மாலை; (அது சுருண்ட வெண்மையான கூந்தலுக்கு உவமை)]
Labels:
அகவன் மகள்,
அறத்தொடுநிலை,
ஔவையார்,
கட்டுக் காணுதல்,
கட்டுவிச்சி
Subscribe to:
Posts (Atom)